மஹிந்தானந்த அளுத்கமகே:திருப்பிவிடப்பட்டார்!



வெளிநாட்டு விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த வாரம் திருப்பி அனுப்பப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு அறிக்கையை வெளியிட்ட அந்த திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம், பெறப்பட்ட தகவலின்படி, ஒரு ஊழியர் வேறொருவரின் தரவை பாராளுமன்ற உறுப்பினரின் கடவுச்சீட்டு தரவுகளாக கணினியில் தவறாக உள்ளிட்டதால் நிலைமை ஏற்பட்டது என்று விளக்கினார். அதன்படி, குறித்த  ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகியோர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தனது அறிக்கையில், ஏற்பட்ட அசௌகரியத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தந்த அளுத்கமகேவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். மத்துகம நீதிமன்றம் விதித்த வெளிநாட்டு பயணத் தடையை காரணம் காட்டி பாராளுமன்ற உறுப்பினர் அளுத்கமகே கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை(10) இரவு திருப்பி அனுப்பப்பட்டார். இதனையடுத்து, தமக்கு எதிராக அவ்வாறான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அறிவித்திருந்தார்.

No comments