இலங்கையில் பரிசீலிக்கும் அதானி!



இலங்கையில் 340 மெகாவோட் காற்றாலை மின் திட்டங்களை தொடங்க அனுமதி பெற்றுள்ள அதானி குழுமம், அங்கீகரிக்கப்பட்ட மின்னுற்பத்தி திறனை 500 மெகாவோட்டாக உயர்த்துமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சியின் பூநகரியில் அதானி குழுமத்தின் காற்றாலைக்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்ட போதும் மன்னார் மாவட்டத்தில் எதி;ர்ப்பு காரணமாக திட்டம் இழுபறிபட்டவண்ணமுள்ளது.

இந்நிலையிலேயே அதானி குழுமத்தின் முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு வருவதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் கடந்த வெள்ளிக்கிழமை (10) அதானி குழுமத்துக்கு தெரிவித்துள்ளார்.

.அதானி குழுமம் அதன் சொந்த 5.2 மெகாவோட் விசையாழிகளை இலங்கைக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் முன்மாதிரி குஜராத்தின் முந்த்ராவில் ஒரு வருடமாக இயங்குகிறது. ஜெர்மனியின் தொழில்நுட்பத்துடன் தனது காற்றாலை இயந்திரத்தை அதானி குழுமம் உருவாக்கியுள்ளது.

இலங்கையில் அனுராதபுரத்தில் இருந்து மதுரை வரை செல்லக்கூடிய மின்சாரம் கடத்தும் பாதை திட்டம் ஒன்றை நிர்மாணிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தனது மின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவும் தீவிர ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ்;ப்பாணத்தின் தீவகப்பகுதிகளில் சீன சார்பு நிறுவனங்கள் மின உற்பத்திநிறுவனங்களை நிறுவ முற்பட்டநிலையிலேயே இந்திய முதலீடுகள் மின் உற்பத்தியில் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


No comments