யாழில். சவேந்திர சில்வாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


நாவற்குழி பௌத்த விகாரைக்கு முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றைய தினம் சனிக்கிழமை நாவற்குழி விகாரைக்கு அருகில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

தமிழர் தேசத்தில் பௌத்த விகாரை எதற்கு !இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா  வெளியேறு! நிறுத்த நிறுத்து பௌத்த மயமாக்கலை நிறுத்து! வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு! நாற்குழி  விகாரை சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் அடையாளம்! திட்டமிட்ட  பௌத்த மயமாக்கலை நிறுத்து! நாவற்குழி தமிழர் தேசம் !தமிழர் தேசத்தில் புத்த கோயில் எதற்கு! என பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.




No comments