தடையில்லா மின்சாரத்தை கோரிய மனு நிராகரிப்பு!


உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் தடையில்லா மின்சாரத்தை வழங்குமாறு, இலங்கை மின்சார சபைக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments