சிறுநீரகக் கடத்தல் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கைது


பொரளை பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சிறுநீரகக் கடத்தல் சம்பவத்தில் இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தலுக்கு ஆதரவளித்த முக்கிய முகவர் ஒருவர், போலி ஆவணங்களை தயாரித்து அதற்கு ஆதரவாக செயல்பட்ட இரண்டு கிராம உத்தியோகத்தர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

குறித்த முகவர் அமர்வீதி பகுதியிலும், கிராம உத்தியோகத்தர்கள் ராஜகிரிய மற்றும் கடுவலை போன்ற பகுதிகளிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments