முன்னணி சார்பில் திலீசன்



யாழ்.மாநகரசபைக்கான முதல்வர் வேட்பாளராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர் கட்சியின் மத்திய குழுவில் முதல்வர் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக கட்சியுடன் இணைந்து செயல்படுவதாலும் முக்கியமான காலகட்டத்திலும் கட்சியுடன் இணைந்து பயணித்ததன் அடிப்படையிலும் மத்திய குழுவில், யாழ் மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக திலீசன்; களமிறக்கப்படவுள்ளார்.

பிரதி முதல்வர் பதவிக்கு கட்சியின் நீண்ட கால உறுப்பினர் கிருபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை பொருளாதார நெருக்கடி நிலையில் மாநகர சபை எல்லைக்குள் வாழுகின்ற மக்களுக்கு ஒரு நேர்மையான பணியினை ஆற்றலாம் என கடைசி வரை எதிர்ப்பார்க்க முடியாது.   

மாநகர சபை நிர்வாகம் நேர்மையான ஒரு பாதைக்குள் செல்லாமல், தங்களுக்கு நன்மையை தேடாமல், இருக்கின்ற வளங்களை வைத்து எந்த அளவுக்கு அதனை மக்களுக்கு திருப்திப்படுத்தி கொடுக்கலாம், இருக்கிற வளங்களை எவ்வாறு அதிகரித்து பங்களிப்பு செய்யலாமென்ற ஒரு மனப்பாங்குடன் ஒரு தரப்பு ஆட்சிக்கு வராமல் மாநகர சபைசெயற்பாட்டினை மாற்றியமைக்க முடியாது.

வடக்கிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர மற்றைய அனைத்து தரப்புகளும் மக்கள் மட்டத்தில் செல்வாக்கை இழந்து கொண்டு போகின்றன எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


No comments