ரோகிங்கிய ஏதிலிகள் :நிலை பாரிதாபம்!



ரோகிங்கிய ஏதிலிகள் 104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிடடுள்ளது இலங்கை நீதிமன்றம்.

மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லிம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்திருந்தனர்.அதன்போது யாழ்ப்பாணம் மருதங்கேணி அருகே நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்த நிலையில் மீட்கப்பட்டிருந்தனர்.

அவ்வாறு தத்தளித்தவர்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டு தற்போது மீரிகான தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..


No comments