அரியாலையில் கைக்குண்டு மீட்பு!




யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கைக்குண்டு ஒன்று இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

அரியாலை குசவம்பலம் வீதியில் கைக்குண்டு ஒன்று காணப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்று , பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயல் இழக்க செய்யும் படையணியின் உதவியுடன் செம்மணி பகுதியில் கைக்குண்டை செயலிழக்க செய்துள்ளனர். 

No comments