மண்டூஸ்” சூறாவளி!



தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு கிழக்கே 370 கி.மீ.) ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மண்டூஸ்” சூறாவளியாக நேற்று மாறியுள்ளது.“

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 09 ஆம் தேதி இரவு நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படலாம்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

டிசம்பர் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு கரையோரத்தின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மிகவும் பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடன் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால்

உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments