இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் !


இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 பருத்தித்துறை அருகே நேற்றைய தினம் புதன்கிழமை இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பன்னிரெண்டு மீனவர்களையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம்ஒப்படைத்தனர். 

அதனை அடுத்து 12 இந்திய மீனவர்களுக்கு எதிராக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரால், இன்றைய தினம் வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் குறித்த மீனவர்களை 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments