கோத்தபாயவை கழுவேற்றும் வரை போராட்டம்!



கொலையாளி கோத்தபாயவை கழுவேற்றும் வரை தனது போராட்டம் கைவிடப்படமாட்டாதென சந்தியா எக்னியாகொட தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 2010 ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன தனது கணவர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போய் 4,712 நாட்கள் கடந்துள்ளதைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய சந்தியா எக்னெலிகொட நீதிக்கான தனது போராட்டம் நிறுத்தப்பட மாட்டாது என உறுதியளித்தார். 

சமீபத்தில் உலகின் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட திருமதி எக்னெலிகொட, 2022 ஜனவரியில் தனது தியாகப் பக்தியின் சாபம் ராஜபக்ஷவைத் துரத்தும் என்று வலியுறுத்தினார். அவரது கணவருக்கு நீதி கிடைக்கும் வரை, தனது போராட்டம் நிறுத்தப்பட மாட்டாது என உறுதியளித்தார். 

No comments