ரணில் மீது சிவிக்கு நம்பிக்கை



இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுக்கள் தொடர்பில் தமிழ் தரப்புக்கள் நம்பிக்கை வெளியிட தொடங்கியுள்ளன.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் சாதகமாகவே அமைய வாய்ப்புள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய நெருக்கடிகள் காரணமாகவே தமிழர் தரப்புடன் பேசுவதற்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகள் எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி மாநாட்டில் தமிழர்களின் தீர்வு விடயம் குறித்து கலந்துரையாடும் பொழுது பெரும்பான்மையின கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் எதிர்க்கருத்துக்களை முன்வைத்திருக்கவில்லை. அதனால் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக அமையலாம் என சி.வி.விக்கினேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments