அச்சுவேலியில் ஆறு மாதங்களுக்கு பின்னர் மண்ணெண்ணெய் விநியோகம்!


அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆறு மாதங்களின் பின்னர் குறித்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கான  மண்ணெண்ணை இன்றைய தினம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

 மண்ணெண்ணையை பெறுவதற்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் பல மணி நேரமாக காத்திருந்து பெற்றுக்கொண்டனர். 

குடும்ப பங்கிட்டு அட்டையின் பிரகாரம் மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றமையால் 3000 ரூபாய்க்கு மாத்திரமே மண்ணெண்ணை வழங்கப்படுகிறது. எனவும் விவசாய தேவைகளுக்கு மண்ணெண்ணெய் போதியளவில் இல்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

No comments