காங்கேசன்துறையில் விபத்து: ஒருவர் காயம்!


யாழ். காங்கேசன்துறை தாவடிச் சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

No comments