தேர்தலை பிற்போட அனுமதிக்கமுடியாது!





ரணில் ராஜபக்ச அரசு தொடர்ந்தும் தேர்தல்களிற்கு பின்னடித்தே வருகின்றது.

இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு காரணங்களை முன்வைக்க தயாராகுமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments