பூநகரியில் சீமெந்து தொழிற்சாலை!



டோக்கியோ சீமேந்து நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றினை பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் அமைப்பதற்கான முதல் கட்ட  திட்ட வரைவு, டோக்கியோ சீமேந்து நிறுவனத்தின் உயரதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இதில் , பிதேச மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டு தமது சந்தேகங்களையும் எதிர்பார்ப்புக்களையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

மக்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட சந்தேகங்கள் தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் , அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு முன்னர் மக்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையிலான அறிக்கை சமர்ப்பிக்குமாறு சீமேந்து தொழிற்சாலை பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளாராம்.

No comments