11பேர் மரணம்:போதையுடன் பல்கலை மாணவன் யாழில் கைது!



யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஊவா பல்கலை கழக மாணவனையும், போதை வியாபாரி என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டவரையும் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஊவா பல்கலை கழக மாணவனை பொலிஸார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட மாணவனின் உடைமையில் இருந்து 750 மில்லி கிராம் ஹெரோயினை கைப்பற்றியுள்ளதாகவும் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

அதேவேளை யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவராக பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்ட 52 வயதான நபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இதனிடையே யாழ்ப்பாணத்தில் உயிர்க்கொல்லி போதைப்பொருட்களை பயன்படுத்திய 11 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் அதிகமானவர்கள் போதைப்பொருள் தொடர்பிலான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனும் போதைப்பொருள் தொடர்பிலான செய்திகள் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

No comments