அழகுசாதன பொருட்கள்:இனி தடையில்லை!



இலங்கையில்  அழகுசாதன பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீக்கப்பட உள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனை அறிவித்துள்ளார்.

குறித்த துறைகளின் பணியாளர்களினால் தொடர்ந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்தத் தடை நீக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments