மூடப்படும் அரச ஊதுகுழல்கள்!



இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களது விசுவாசமாகி தமிழ் மக்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தி வந்திருந்த அரச ஊடகங்கள் மூடும் நிலைமை அடைந்துள்ளன.

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு கடந்த ஆண்டு (2021) 31 கோடிக்கும் மேல் இழப்பை சந்தித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு  107,189,266 நட்டத்தைக் கொண்டிருந்ததுடன் 05 வருடங்களில் இந்த நட்டம் இருபது கோடி ரூபாவால் அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்தில் சுயாதீன தொலைக்காட்சி 238,131,346 ரூபா நட்டத்தையும், ITN FM 41,325,521 ரூபாவையும் நட்டத்தைச் சந்தித்துள்ளது.

வசந்தம் எப்எம்மின் நஷ்டம் ஒரு கோடியே நாற்பத்தைந்து ஆயிரத்து ஐந்தாயிரத்து எண்ணூற்று ஐம்பத்திரண்டு ரூபாய்.

வசந்தம் தொலைக்காட்சிக்கு அரசாங்கத்தினால்  46,337,505 மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மானியம் பெற்ற பிறகும், வசந்தம் சேனல் 26,061,682 நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

No comments