173 பேருடன் சென்ற கொரியன் ஏர் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாது


பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் தரையிறங்கிய கொரிய நாட்டு பயணிகள் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி புல்தரையில் இறங்கி விபத்துக்குள்ளானது.

விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தபோதும் அதில் பயணித்த 173 பேரும் எவ்வித காயங்களுமின்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

மோசமான வானிலையால் விமானத்தை தரையிறக்கும் முயற்சி 2 முறை  தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது முறை தரையிறக்கப்பட்டபோது ஓடுபாதையைத் தாண்டி விபத்துக்குள்ளானது.

No comments