சுமா பின்னாலும் புலனாய்வாம்!





நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய என்னையும் மற்றும் சாணக்கியனையும் இனந்தெரியாத நபர்கள் பின்தொடர்ந்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“ நானும், சாணக்கியனும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் நண்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து தனித்து வாகனத்தில் வெளியேறியிருந்தோம்.

இதன்போது எம் இருவரையும் உந்துருளி ஒன்று பின்தொடர்ந்து வருவதை எங்களது பாதுகாப்பு அதிகாரிகள் அவதானித்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட உந்துருளி ஒன்றே எம்மை பின்தொடர்ந்து வந்தது.

எமது பாதுகாப்பு அதிகாரிகள் காவல்துறையினருக்கு அறிவித்தனர். காவல்துறை பொறுப்பதிகாரி அலோக்க பண்டார சிறிது நேரத்திற்கு பின்னர் எங்களது பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புலனாய்வாளர்களே எங்களை பின்தொடர்வதாக தெரிவித்தார்.

புலனாய்வாளர்களுக்கு எவ்வாறு கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட உந்துருளி வழங்கப்பட்டதென எம்.ஏ.சுமந்திரன் கேள்;வியினை எழுப்பியுள்ளார்.


No comments