2.5 கோடி ஜீப்:கொள்வனவு செய்த இளைஞர் கைது!



சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தின் மூலம், 65 இலட்சம் ரூபா மதிப்புள்ள கார் மற்றும் 2.5 கோடி ரூபா பெறுமதியான ஜீப் என்பவற்றை கொள்வனவுசெய்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையினை சேர்ந்த இவர், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் தனது தந்தை சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தியே குறித்த இளைஞர் வாகனங்களை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments