என்ன வெட்டுகிறாய்!குளம் வெட்டுகின்றேன்.

.


வலி வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் பிள்ளையார் குளத்தில் சட்டவிரோத பாரிய மண் அகழ்வு இடம் பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது குறித்த பிள்ளையார் கோயிலின் குளத்தில் இருந்து தனியார் ஒருவர் குளத்தில் தாமரை வளர்க்கப் போவதாக தெரிவித்து குளத்தில் இருந்து சுமார் 200 லோட்டுக்கு அதிகமான மணலை வெளி இடங்களில் விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் குறித்த குளத்தை கால்நடைகள் குடிநீருக்கு பயன்படுத்தும்  நிலையில் பாரிய குழிகள் தோண்டப்பட்டு மண் அகழ்வு இடம் பெற்று வருவதால்  கால்நடைகள் குளத்துக்குள் மூழ்கும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் ஊர் மக்கள் சிலர் குறித்த குளத்தில் மணல் அகழ்வை மேற்கொள்பவர்கள் பிரதேச சபை தவிசாளர் தமக்கு அனுமதி தந்ததாக தெரிவித்தே மணல் ஏற்றிச் சென்றதாகத் தெரிவித்தனர்.

குறித்த விடையம் தொடர்பில் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பிரபாகரன் கருத்து தெரிவிக்கையில் குறித்த குளத்தில் இருந்து ஒரு கிழமைக்கு மேலாக பாரிய அளவில் சட்டவிரோத மண் அகழ்வு இடம் பெறுகிறது.

 சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் பிரதேச சபை செயலாளருக்குத் தெரியப்படுத்தியதோடு தெல்லிப்பழைப் பிரதேச செயலாளருக்கும் தெரியப்படுத்தினேன் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்

குறித்த விடயம் தொடர்பில் வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த குளம் கமநல சேவைத் திணைக் களத்தின் கீழ் வருவதாகவும் மண் அகழ்வுக்கு தாம் அனுமதி வழங்கவும் இல்லை வழங்கவும் முடியாது என்றார்.

குறித்த விடயம்  தொடர்பில் வலி வடக்கு பிரதேச சபையின் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது பிரதேச சபை அதற்கான அனுமதியை வழங்கவில்லை என தெரிவித்ததோடு மண் அகழ்வு தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் தமக்கு அறியத் தந்தார் என தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட கமநல உதவி ஆணையாளர் நிஷாந்தனை தொடர்பு கொண்டபோது குறித்த குளத்தில் மண் அகழ்வு இடம் பெற்றமை தொடர்பில் பிரதேச சபை தமக்கு தெரியப்படுத்தவில்லை என தெரிவித்தார்.

No comments