அடகு வைக்க ஏதுமில்லை!

 


பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இனி எதனையும் செய்ய முடியாது என்பது 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பின் மூலம் தெளிவாகி உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

பசில் ராஜபக்சவின் கருத்துக்கு எதிராகச் சென்று எம்.பி.க்கள் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக தெரிவித்த அவர், பாராளுமன்றத்தில் பசிலுக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் இன்று மக்கள் வாழ முடியாத மிக மோசமான நிலைமை உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதற்காக அனைத்தையும் அடகு வைத்துவிட்டு இனி அடகுவைக்க ஒன்றும் இல்லாமல் மக்கள் தவிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.


பாடசாலை மாணவர்களில் சுமார் முப்பது வீதமானவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

No comments