விறகு வெட்டியவர்களை பிடித்து சாதனை!



யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் சவுக்கங்காட்டில் விறகு வெட்ட சென்ற அப்பாவிகளை காவல்துறை கைது செய்துள்ளது.

சவுக்கு மரங்களை வெட்டி கடத்த முற்பட்ட ஏழு துவிச்சக்கார வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மணற்காடு சவுக்கங்காட்டில் சட்ட விரோதமாக முழு மரமாக சவுக்கம் மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய விசேட குற்ற தடுப்புப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் காட்டுப் பகுதியை  பொலிசார் சுற்றி வளைத்த போது சட்ட விரோதமாக சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட சமயம் ஏழு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


No comments