கோத்தாவிற்கு ஜடியா இல்லை!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை நட்டாற்றில் கைவிட்ட அரசியல்வாதிகள் தொடர்பில் சீற்றமாவுள்ளார்.அத்துடன் மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரைச் சந்திக்கப் போகும் அரசியல்வாதிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கூட ஆர்வம் காட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது.
அவருடனான உரையாடல்கள் அரசியல் இல்லாமல் பொதுவான தகவல்கள் மட்டுமே என்றும் கூறப்படுகிறது.
அவர் அரசியலுக்கு வருவது குறித்து சில வருத்தங்கள் இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அவரது குடும்ப அங்கத்தவர்களே கூட அவரது அரசியல் வருகையினை விரும்பவில்லையென கூறப்படுகின்றது
Post a Comment