யாழில் மக்கள் சக்தி அலுவலகம் மீது தாக்குதல



யாழ். வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான முருகவேல் சதாசிவம் என்பவருடைய நல்லூரில் அமைந்துள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் வியாழக்கிழமை கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இத் தாக்குதலினால் அமைப்பாளரின் அலுவலக யன்னல்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிகக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக  யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

No comments