பயங்கரவாதத்தடைச்சட்டத்திற்குப்பதிலாக புதிய சட்டம்?



 இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்க நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ செயற்பட்டு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலத்தை எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார். எனவே, புதிய புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படும்போது, பழைய பயங்கரவாத தடைச் சட்டம் ரத்தாகும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

No comments