யாழில் கடந்த 3 மாதங்கள் திறன்பேசிகளைத் திருடிய கும்பல் பிடிபட்டது


யாழ்ப்பாணத்தில் கடந்த 3 மாதங்களாக திறன்பேசிகளைத் திருடிய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 திறன்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

நாவற்குழி மற்றும் அரியாலையைச் சேர்ந்த 23, 24 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐபோன் உள்பட 45 திறன்பேசிகள் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருளுக்கு அடிமையாகியதால் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் திறன்பேசிகளைத் திருடி தப்பிப்பதாக சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இடம்பெற்ற திறன்பேசித் திருட்டுகளிலும் இவர்களுக்கு தொடர்புண்டு என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

திறன்பேசித் திருட்டு போயிருந்தால் உரியவர்கள் யாழ்ப்பாணம் தலைமையக காவல்நிலையத்தில் வந்து அடையாளம் காட்டி பெறமுடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments