பின்வாங்குவதாகக் காலிமுகப் போராட்டக்காரர்கள் அறிவிப்பு!


காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கடந்த 98 நாட்களாக அரச எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த போராட்டக்காரர்கள் கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றிலிருந்து தாம் உடனடியாக வெளியேறுவதாக இன்றையதினம் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, தமது போராட்டாம் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து வெளியேறும் வரை தொடரும் என காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments