தீர்வைக் காண விரைவாகச் செயற்படுத்துங்கள் - அமெரிக்கா


நீண்ட கால தீர்வைக் காண விரைவாகச் செயற்படுமாறு இலங்கைத் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகத் தயாராகி வரும் நிலையில்,  தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புடன் இந்த தருணத்தை அணுகுமாறு இலங்கை நாடாளுமன்றத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுக்கிறது என இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இராஜாங்கச் செயலாளர் ஆண்டனி தெரிவித்துள்ளார். 

இதேநேரம் அமெரிக்க அரசாங்கதின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்:

நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும், மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட மோசமான பொருளாதார நிலைமைகள் தொடர்பாக இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்கும் தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அரசாங்கத்தையோ அல்லது அரசியலமைப்பு ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட எந்தவொரு புதிய அரசாங்கத்தையும் விரைவாகச் செயற்படுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கை மக்களுக்கு அமைதியான முறையில் குரல் எழுப்ப உரிமை உள்ளது, மேலும் போராட்டம் தொடர்பான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட எவரையும் முழு விசாரணை, கைது மற்றும் வழக்குத் தொடருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

No comments