நடுநிலமையென துரோகம் வேண்டாம்!



ஜனாதிபதி தெரிவின்போது தமிழ் மக்களின் அபிலாசைகளை கருத்த்திற்கொண்டும் தமிழ் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த மாணவ பிரதிநிதிகள் வடகிழக்கு தமிழ் தரப்புகளுக்கு இது ஒரு முக்கியமான தருணம். இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளை கருத்த்திற்க்கொண்டும் தமிழ் கட்சிகள் செயல்பட வேண்டும்.தமிழ் தரப்புக்கள் ஆதரிக்கும் வேட்பாளர் எமது தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் ஏற்கும் தருணத்தில் நடுநிலையாக செயல்படாமல் அவ்வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்க வேண்டுமென மாணவர் சமூகமாக நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நீங்கள் தமிழ் மக்களின் உண்மையான தேவைகளை புரிந்து இருப்பீர்கள் என நம்புகிறோம். காலங்காலமாக தமிழ் மக்கள் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றம் அடைந்து இருக்கின்ற வேளையில் சந்தர்ப்பத்தை; சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

தென்னிலையில் மக்கள் அனைவரும் இக்கட்டான சூழலிற்கு தள்ளப்பட்ட வேளையில் அவர்களின் தலைவர்களுக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். அதே நிலைமையை கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் ஒரு காலகட்டத்தில் நம்பிக்கையை இழந்து செயல்படும் பட்சத்தில் மாணவர் சமூகமாக இருக்கின்ற நாங்கள் மக்களுடன் இணைந்து செயல்படுவோம் என் கூறிக் கொள்ள விரும்புகிறோம் .

தமிழ் அரசியல் கட்சிகள்; கருத்து வேறுபாடுகளை விட்டு சிறந்த ஜனாதிபதியை தெரிவு செய்ய முன்வர வேண்டும் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.


No comments