யாழ்ப்பாணத்தில் துவிச்சகரவண்டிகளை காணோம்



எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கண்டுகொள்ளபடாதிருந்த துவிச்சக்கர வண்டி 57ஆயிரமாகியுள்ளது.எனினும் இவ்விலைக்கு கூட பொருட்கள் இல்லையென்கின்றன வர்த்தக வட்டாரங்கள்

சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சைக்கிள் விற்பனை நிலையங்களை மக்கள் அதிகளில் நாடுகின்றனர்.

மக்கள் சைக்கிள் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

தற்போதுவரை சாதாரண சைக்கிள் ஒன்றின் விலை, 50 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், புதிய வடிவிலான மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட சைக்கிள்,  ஒரு இலட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

அதேநேரம், சைக்கிள் உதிரிப்பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments