தாய்மையினை மதியுங்கள்: ரணில்!



மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக் கூடாது. தாய்மை என்ற கருத்து மதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர நேற்றைய தினம் பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமை குறித்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் அரசியல் போராட்டத்துக்காக வந்திருந்தார். எனவே அது தொடர்பான சித்தாந்தத்துடன் அதைக் கையாள வேண்டும். அவரது தாய்மையை அவமதிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்ரம் பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments