மார்பகங்கள்:கிருனிகாவுக்கும் இசைப்பிரியாக்குவும் ஒன்றே!



ஹிருணிகாவின் மார்பகங்களை பார்த்ததும் மூச்சுத் திணறல் அடைந்தவர்கள் இசைப்பிரியாவை நிர்வாணமாக்கி,பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் பாற்சோறு உண்டு மகிழ்ந்தவர்கள் என போட்டு தாக்கியுள்ளனர் தென்னிலங்கை பெண்ணியவாதிகள்.

நான் என் மார்பகங்களைப் பற்றி பெருமைப்படுகிறேன்! நான் மூன்று அழகான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, என் முழு உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன். எனது வெளிப்பட்ட மார்பகங்களை கேலி செய்பவர்கள் (காவல்துறையுடனான மோதல் காரணமாக) குழந்தைகளாக இருந்தபோது அவர்களின் தாய்மார்களின் முலைக்காம்புகளை பச்சையாக உறிஞ்சியவர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.



எப்படியும் என் மார்பகங்களைப் பற்றி பேசி, மீம்ஸ் செய்து, சிரித்து முடித்ததும், வரிசையில் நின்று கொண்டிருந்த இன்னொரு பொதுமகன் இறந்து போனார். உங்களுக்குத் தெரியுமாவென கேள்வி எழுப்பியுள்ளாh ஹிருனிகா.

இதனிடையே இந்த நாட்டில் மன நோயாளிதான் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் மதப் பாத்திரங்கள் அனைத்திலிருந்தும் வெளியே குதித்த்து விமர்சிப்பவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ரணிலின் வீட்டின் முன்னதாக நடந்த போராட்டத்தில் பங்கெடுத்த ஹிருனிகா பற்றி சமூக ஊடகங்களில் பரப்புரைகள் மோசமாக முன்னெடுக்கப்படுவது தெரிந்தே.



No comments