விசுமடுவில் ரணகளம்: சூடு,மூடு!
முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை இராணுவத்தினரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது
இதனிடையே கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகம் இன்று முதல் மூடப்படும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.டி.லமவன்ச தெரிவித்துள்ளார்.
அனைத்து மாணவர்களும் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் போது மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
Post a Comment