கிளிநொச்சியில் குளவி கொட்டு: மருத்துவமனையில் 25 மாணவர்கள்


கிளிநொச்சியில் பாடசாலையொன்றில் இன்று (07) குளவி கூடு கலைந்தமையால் குளவிக்கொட்டுக்கு இலக்கான 25 மாணவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று பாடசாலை நிறைவு பெறும் நேரத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை பகல் 1.30 மணியளவில்  குரங்குகளின் நடவடிக்கையால் குளவி கூடுக் கலைந்துள்ளது.

இதன் காரணமாக பாடசாலை விட்டு வெளியேறுகின்ற நேரத்தில் பல மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த நேரத்தில் மாணவர்கள் பதற்றத்துக்குள்ளாகியதோடு, சில மாணவிகள் குளவி கொட்டுக்குள்ளாகி மயக்கமடைந்தும்  காணப்பட்டனர்.

இவர்கள் உடனடியாக சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் வாகனத்தில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments