பெண்ணைக் கடத்தி கப்பம் கேட்ட நால்வர் கைது!


வவுனியா - பூவரசங்குளம் பகுதியில் பெண் ஒருவரை கடத்தி கப்பம் கோரிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் கடத்திய பெண்ணின் மகளுக்கு நேற்று அழைப்பை ஏற்படுத்தி 5 இலட்சம் ரூபா பணம் வழங்குமாறு கோரியுள்ளனர்.

அவ்வாறு வழங்கப்படவிட்டால் அவரை கொலை செய்வதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, கோரிய கப்பத்தை வழங்குவது போல் பாசாங்கு செய்து காவல்துறையினர் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments