நெதர்லாந்தில் சூறாவளி: சொத்துக்கள் பெரும் சேதம்! பலர் காயம்!


நெதர்லாந்தை தாக்கிய சூறாவளியால் குடியிருப்புகள், வளாகங்களின் மேற்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. 

நேற்று திங்கட்கிழமை பிற்பகல் வீசிய சூறாவளியில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

துறைமுக நகரமான Zierikzeeயில் திடீரென கட்டுக்கடங்காத அளவில் சூறாவளி காற்று வீசியது.

வணிக வளாகங்கள், குடியுருப்புகளின் மேற்கூரைகள் மற்றும் கட்டடங்கள் பொருட்கள் என காற்றில் தூக்கி எறிந்து வீசப்பட்டன. 



No comments