ஈரானிய அசானி வரலாம், இந்திய அதானி வரக்கூடாதா? சிவசேனை!



மன்னார் மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் முகமது ஆலிம் இலங்கை அரசு வடக்கு மாகாணத்தை இந்தியாவிற்கு விற்கப் போகிறது என்ற கருத்தை விதைத்திருக்கிறார். இலங்கை அரசு இறையாண்மை உள்ள அரசு. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை பெற்ற அரசு. இலங்கை நிலஅளவைத் திணைக்களம் வெளியிட்ட எல்லைக்கோடுகள் மிகத் தெளிவாக உள்ளன.

இந்த எல்லைக் கோடுகளுக்கு உள்ள எந்தப் பகுதியையும் நிலப் பகுதியையோ நீர்ப் பகுதியையோ எவரும் எவருக்கும் விலைக்கு விற்க முடியாது. எவரும் வாங்கவும் முடியாது என மறுதலித்துள்ளது ஈழம் சிவசேனை அமைப்பு. 

அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்  எனினும் இந்த எல்லைக் கோட்டுக்குள் உள்ள நிலப் பகுதிகளில் கடந்த 200 ஆண்டுகளில் ஊடுருவித் தமக்கென தனித்தனிப் பகுதிகளை நிறுவி உள்ளவர்கள் முகமதியரே.

இறைத் தூதர் முகம்மது நபியவர்கள் இந்த நாட்டவர் அல்லர்.  முகமதியம் இந்த மண்ணில் பிறந்த மரபு அல்ல.

பேரிச்ச மரங்கள் இடையே ஒட்டகங்களும் மணல் கும்பிகளும் நிறைந்த பாலைவன அரபு நாட்டில் பிறந்தவர். அரபு நாட்டுக்காக மரபுகளை உருவாக்கியவர்.

இலங்கை மண்ணுக்கான மரபுகளை இறைத்தூதர் முகம்மது நபி அவர்கள் உருவாக்கவில்லை. இலங்கை மண்ணுக்கான மரபுகளை ஆதிகாலத்திலிருந்தே இந்த மண்ணின் மக்களான தமிழ்ச் சைவர்களே உருவாக்கினார்கள்.

கிழக்கு மாகாணத்தின் வடக்கு மாகாணத்திலும் சைவ மரபுகளை, இந்த மண்ணின் மரபுகளை, உடைத்தெறிய வேண்டும் என்ற ஆக்கிரமிப்பு நோக்குடன் எங்கோ பாலைவன மண்ணில் அரபு தேசத்தில் உருவாகிய மரபுகளைத் திணிக்கவே தீவிரவாத முகமதியர்கள் சைவர்களின் நிலங்களை ஆதிவாசிகளின் நிலங்களை ஆக்கிரமித்து வருகிறார்கள்.

வடக்கு மாகாணத்தில் முள்ளிக்குளத்திலே ஈரானிய எரிபொருள் கிணற்றுத் தொழிலதிபர் ஓராயிரம் வீடுகள், நீர்ப்பாசனக் குளம், மருத்துவமனை, பாடசாலை, சமூக கூடங்கள் என்பனவற்றை உருவாக்கினார், வில்பற்றுக் காட்டை அழிக்கிறார், என அப்பொழுது வணக்கத்துக்குரிய ஞானசார தேரர் பொருமியதையும் போராட்டம் நடத்தியதையும் முகம்மது ஆலிம் மறந்து போனாரா?

அதானியின் சொத்துக்கள் அனைத்தையும் வாங்கக்கூடிய செல்வந்தர் அல்லவா அந்த ஈரானிய எரிபொருள் கிணற்றுத் தொழிலதிபர்.

சைவத் தமிழரின் நிலத்தை அடாவடித்தனமாக அத்துமீறிக் கைப்பற்றித் தம் வசமாக்கி ஈரானிய தொழில் அதிபரின் பெயரை அந்த நகருக்குச் சூட்டி, ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் அவர் பெயரை எழுதி, இலங்கையின் நிலப் பகுதியை வாங்க முயற்சித்தவர் ஈரானியர்.

காத்தான்குடி அழகான தமிழ்ப் பெயர். அங்கு தமிழர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தார்கள். சைவர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தார்கள். 

இன்று காத்தான்குடியைப் பாருங்கள் பேரீச்சம்பழங்களைத் தெருவெல்லாம் நாட்டி, அரபு எழுத்துக்களைப் பெயர்ப்பலகை எங்கும் எழுதி, கிழக்கு மாகாணத்தின் முகத்தையே மாற்ற முயற்சிக்கின்றனர் முகமதிய ஊடுருவலாளர்.

முகம்மதியத் தீவிரவாதிகளின் புகலிடமாகக் காத்தான்குடி உள்ளதே. 

ஈராக்கியத் தலைவர் பெயரிலுள்ள சதாம் உசேன் நகர் இலங்கைக்குள் நுழைந்ததே.

கடந்த 20 ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் திருகோணமலை மாவட்டம் முகமதியரின் பெரும்பான்மை மாவட்டங்கங்களாக மாறியுள்ளதை ஆலிம் அறியாரா?

மன்னாரில் தமிழ் பெயர் கொண்ட எத்தனையோ ஊர்களை முகமதியப் பெயர்களுக்கு மாற்றி வருகிறார்கள். 

திருகோணமலையில் மட்டக்களப்பில் அம்பாறையில் புத்தளத்தில் எத்தனை ஊர்களின் தமிழ்ப் பெயர்களை முகமதியப் பெயர்களாக மாற்றி உள்ளார்கள்?

அமைச்சர் பதவியைப் பயன்படுத்தினேன்.  காளி கோயிலை இடித்தேன். நிலத்தை முகமதியரிடம் கை அளித்தேன் என இசுபுல்லா வெளிப்படையாகச் சொல்ல வில்லையா?

இலங்கை இறையாண்மையை அரபு நாடுகளுக்கு விற்க முயல்பவர்கள் இங்குள்ள முகமதியர்.

ஈரானிய தொழிலதிபர் அசானியை, அரபுத் தொழிலதிபர்களை, இலங்கைக்குள் நுழைத்து இலங்கையின் நிலப்பகுதிகளை அவர்களுக்கு விற்றவர்கள் முகமதியர்.

ஈரானிய அசானி வரலாம், இந்திய அதானி வரக்கூடாது என்கிறாரா முகம்மது ஆலிம்?

காற்றாலைகள், சூரிய ஒளித் தகடுகள், கடல் அலை மின் உற்பத்தி,  வந்துவிட்டால் அரபுநாட்டு எரிபொருளுக்கு இலங்கையில் தேவை இருக்காது என்பதால் முகம்மது ஆலிம் அதானியின் முதலீட்டை எதிர்க்கிறாரா?

வணிகத்திற்காக வந்தவர்கள், வணிக நோக்கத்துக்காக இலங்கையைப் பயன்படுத்த முயல்பவர்கள் மாற்று மின் உற்பத்தித் திட்டங்களை எதிர்க்கிறார்கள். 

எந்தப் பொருளையும் வாங்கவும் விற்கவுமே தெரிந்தவர்கள் இலங்கை வடக்கு மாகாணத்தை இந்தியாவிற்கு விற்கப் போவதாக அரசியல் அறிவுக் குறைவால் அலறுகிறார் ஆலிம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments