நிம்டம்புவை சம்பவம்: மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்தார்


நிட்டம்புவையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், பொலன்னறுவை மாவட்ட சிறீலங்காப் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளை உயிரிழந்துள்ளதாக என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று திங்கட்கிழமை  மாலை நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவொன்று, அப்பகுதியில் கூடியிருந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர். அந்த இடத்தை விட்டு ஓடி அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்." என்று ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் கட்டிடத்தை சூழ்ந்த, பின்னர் அவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு  தற்கொலை செய்து கொண்டதாக  மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments