பெல்ஜியத்தில் நினைவேந்தப்பட்ட தமிழினப் படுகொலை

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பெல்சியம் நாட்டின் தலைநகர் புறுசெல்ஸ் ( Brussels ) இல் மிக

உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது. இதில் தமிழ் மக்கள் ஒன்றுகூடி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற அழிவுகள் புகைப்படக் கண்காட்சி மூலம் மக்களுக்கு எடுத்துக்காட்டி தமது துன்ப அனுபவங்களை நினைவு கூர்ந்ததோடு இலங்கை அரசிற்கு எதிரான கோசங்களை எழுப்பி தமிழ் மக்களின் விடிவிற்காக உணர்வெழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் செய்து முள்ளிவாய்க்காலில் அமிர்தமாக மக்கள் பசியைப் போக்கி உயிரைக் காத்த கஞ்சியை அதே உணர்வுடன் அனைவருக்கும் பரிமாறி நினைவு நிகழ்வில் உணர்வின் வரிகளை கவிதையாக கண்ணீருடன் வடித்து வணக்கம் செலுத்தினர







No comments