இரண்டாயிரம் கோடி தொலைந்ததாம்??



ராஜபக்ச தரப்பு மற்றும் நெருங்கியவர்கள் மீதான தாக்குதலில் ஏற்பட்ட இழப்பு இரண்டாயிரம் கோடியென தெரியவந்துள்ளது

இலங்கையில் கடந்த நாட்களில் இடம்பெற்ற கலவர நிலையில், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் என இவ்வாறு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஆர்பாட்டங்கள் என்ற போர்வையில் சேதம் ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

No comments