ஸ்ராலின் பொய் சொல்கிறார்:டக்ளஸ்!



கச்சதீவு விடுவிப்பது தொடர்பான தமிழக முதலமைச்சரின் கருத்து சாத்தியமற்றது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் கச்சதீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென கோரிக்கை விடுத்திருந்தார்.  

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழக முதலமைச்சரின் கருத்தை நான் மறுக்கா விட்டாலும், அவரின் கருத்து சாத்தியமற்றது. தமிழக மக்கள் முதலமைச்சருக்கு அழுத்தத்தை கொடுத்திருக்கலாம். அதற்காக முதலமைச்சர் அவர்கள் இவ்வாறான கருத்தை தெரிவித்திருக்கலாம். அவரின் கருத்து உண்மையாக இருக்குமாக இருந்தால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதனை கூறியிருப்பார்.


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் ஒரு இணக்கப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாஜ.க தலைவர் அண்ணாமலைக்கு கச்சத்தீவால் யாருக்கு அதிக லாபம் கிடைக்கிறது என்று சட்டப்பூர்வமாக கடிதமொன்றை அனுப்ப உள்ளேன் என தெரிவித்துள்ளார். 


No comments