அண்ணாமலை யாழில்:அகதிகள் தமிழகத்தில்!



 பாரதிய ஜனதாக்கட்சி தமிழ் மாநில தலைவர் அண்ணமலை இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் இன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.

இதனிடையே ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் 2 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய  பொருட்களான அரிசி, பருப்பு, பால், பெட்ரோல், டீசல்  உள்ளிட்ட பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்து மக்கள் வாழ்வதற்கே வழியில்லாமல்  சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

 இந்த நிலையில் ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து இலங்கையில் வாழ வழியின்றி ஈழத்தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு செல்வது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இந்த நிலையில் ஏற்கனவே 21 குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் வந்துள்ள நிலையில் தற்போது ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை கடற்கரைப் பகுதியில் 2 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.





No comments