தப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது!



இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு தப்பித்து செல்லமுற்பட்டவர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்தே செல்கின்றது.

நேற்றைய தினமும் திருகோணமலையில் இருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை சாம்பல் தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று (23) இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை காவல்துறையுடன் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தப்பிக்க முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் 3 குழந்தைகளும் அடங்குவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த வர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.


No comments