சிங்கள தேசம்:கைதாகி 24மணி நேரத்தில் விடுதலை!





அரசிற்கு எதிராக செயற்பட்ட சிங்கள தேசத்திற்கு அவசரகாலம், பயங்கரவாதம் தொடர்பிலான சட்டங்களை பிரயோகிக்க காவல்துறை பின்னடித்துவருகின்றது.

பல தரப்புக்களிலிமிருந்து எழுந்த எதிர்ப்புக்களையடுத்து கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திசர அனுருத்த பண்டார முகத்துவார பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

தண்டனை சட்ட கோவையின் 120ஆம் இலக்க பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி விளைவித்தமைக்காக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

No comments