கஞ்சா கடத்தல்காரரே அகதிகளென நாடகமாடினர்?



அகதிகள் பெயரில் இன்று காலை தமிழகம் சென்ற யாழ்.இளைஞர்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்பது அம்பலமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால் , அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குருநகர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் தமிழகம் , தனுஸ்கோடியை அண்மித்த தொண்டி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

ஐகதான போது இருவரும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்கு தஞ்சம் கோரி வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது ,இருவருக்கும் எதிராக இலங்கை நீதிமன்றில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் இருவரையும் அகதிகளாக ஏற்காமல் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


No comments