மொட்டு கூட்டத்தில் போட்டுப்பிடிப்பு!



நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு - கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

தற்போது நிலவும், எரிபொருள், சமையல் எரிவாயு நெருக்கடி உட்பட பொருளாதார பிரச்சினைகள் குறித்து இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் விடயம் தொடர்பில் கருத்து முன்வைக்கப்பட்டபோது, இந்தக் கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவி விலகவேண்டும் என தான் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுன நாடாளுமன்றஉறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து ஜனாதிபதி தான் பிரதமர் பதவி விலகவேண்டும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் நோக்கமும் தனக்கில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற  குழு கூட்டத்தில் ஜனாhதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் பிரதமர் தொடர்பான அவரது நிலைப்பாடு என்ன அனைத்து கட்சி அரசாங்கத்திற்காக பிரதமர் பதவி விலகவேண்டும் என அவர் எதிர்பார்க்கின்றாரா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி தனக்கு அவ்வாறான நோக்கம் இல்லை தான் வேண்டுகோள் விடுக்கவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

No comments