ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட குழு கூட்டம் இன்று!



ஐக்கிய மக்கள்  சக்தியின் விசேட குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இதற்காக, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிராக கையொப்பமிடப்படும் அவநம்பிக்கை பிரேரணை தொடர்பிலும், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை  ஆரம்பமாகவுள்ள இந்தக் கூட்டத்தில், நாட்டின் தற்போது இடம்பெறும் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

No comments